![]() |
வியாழன், 27 அக்டோபர், 2011
இருள் நீக்கி ஒளி தரும் தீபாவளி!
வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011
இன்று மாங்கல்யம் காக்கும் வரலட்சுமி விரதம்

ஆவணி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில், பெண்கள் வரலட்சுமி விரதம் இருக்கிறார்கள். லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றியவள். இவள் விஷ்ணுவை மணந்து, பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராம அவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப் பட்டு, தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவனின் மனம் கோணாமல் நடந்தவள். அந்த தாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில் வரலட்சுமி விரதம் நோற்கப்படுகிறது.
மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாக பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களையும் வாரி வழங்குபவள் அவள். லட்சுமிதேவி பொறுமைமிகுந்தவள். அதர்வண வேதத்தில் லட்சுமிதேவி அனைவருக்கும் நன்மையே செய்வாள் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் லட்சுமி தேவியால் பொறுத்துக் கொள்ள முடியாது. மேலும் அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் நிற பட்டு உடுத்தி காட்சி தருவாள். கணவனின் இதயத்தில் குடியிருப்பவள். பெருமாள் கோயில்களில் லட்சுமி ஆரத்தை மார்பில் அணிவித்து இருப் பார்கள். பெண்களுக்கே உரித்தான கருணை, அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு இவள் அதிபதி. வரலட்சுமி விரதம் இருப்பதால் பல பலன்கள் ஏற்படும். நாம் பிறருக்கு அறிந்தோ, அறியாமலோ செய்த துன்பங்களும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் விலகும்.
சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியின் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் கூறினாள். பின்பு ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றாள். புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவதும், வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானது. குடும்பத்தில் மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கு வரலட்சுமி விரதம் சிறந்த பலன் தரும்.
விரத முறை: இந்த விரதம் இருக்க வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபத்தை எழுப்பவேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமி முகத்தை, தாழம்பூ சூட்டி ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள், தங்கக்காசுகள் (முடியாவிட்டால் மஞ்சள் செவ்வந்தி) வைத்து சிலைக்கு புதிய மஞ்சள் நிற ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தில் சந்தனம் குங்குமம் இட வேண்டும். கும்பத்தின் மேல் மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். பின்பு ஐந்து வகை ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும்.
கும்ப பூஜை முடிந்தபிறகு கணேச பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்யும் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம் அல்லது ஒலிக்கச் செய்யலாம். அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். மஞ்சள் கயிறை வலதுகையில் கட்டவேண்டும். நைவேத்யமாக அம்மனுக்கு கொழுக் கட்டை படைக்கலாம். பூஜைக்குப் பின்பு கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மறுநாள் லட்சுமி உருவத்தை நீர் நிலையில் கரைத்துவிட வேண்டும். அட்சய திரிதியை, ஆடிப்பெருக்கு போல இன்றும் தங்க நகைகள் வாங்க நல்ல நாள். இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
திங்கள், 27 ஜூன், 2011
சிறந்த பொன்மொழிகள்
பொன்மொழிகள்
வார்த்தைகளில் தான் வாழ்கிறோம்.
செயலில் அல்ல ?
வாழ்க்கையின் எந்தத் துறையிலும்
ஆன்மீகத்திலாகட்டும், பாலுறவிலாகட்டும்
வார்த்தைகளே நம்மைத் தூண்டுகின்றன.
(ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி)
எண்ணங்களில் கவனமாக இருங்கள் -
அது வார்த்தைகளாக வெளிப்படுபவை.
வார்த்தைகளில் கவனமாக இருங்கள் -
அது செயலாக வெளிப்படுபவை.
செயல்களில் கவனமாக இருங்கள் -
அது பழக்கமாக மாறுபவை.
பழக்கங்களில் கவனமாக இருங்கள் -
அது உங்கள் ஒழுக்கமாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள் -
அது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்.
சொல்லுக்கும்,செயலுக்கும் -
நெருங்கிய சம்பந்தம் இருக்க வேண்டும்.
பிறரது உதாசீனம் பிறரது அவமானச்சொல் -
சில சமயம் நம் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடக் கூடும்.
அன்பான பதில் -கோபத்தை விரட்டி அடிக்கிறது.
துக்ககரமான சொற்கள் - கோபத்தை உண்டாக்குகின்றன.
(சாலமன்)
சொற்கள் - பழைய அர்த்தங்களை இழந்து விடுவதே
சமூதாயப் புரட்சியின் முதல் அறிகுறி.
(கிரேக்க வரலாற்று அறிஞர் துஸிடீடிஸ் 470 ? 400 கி.மு)
பயனில்லாத சொற்களைப் பாராட்டுகிறவனை
"மக்கட்பதடி" என்கிறார் வள்ளுவர்.
மிகக் கடினமான பெரிய வார்த்தைகளைக் கொண்டு அழகான பிரசங்கம் செய்து வருபவன் உண்மையில் உங்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க விரும்புவதில்லை. அவன் தன் மேதாவித்தனத்தை நிரூபிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறான்.
ஓ.மில்லர்.
கால் இடறி கீழே விழும் போது ஏற்படும் காயம் ஆறிவிடும். ஆனால் யோசிக்காமல் தவறுதலாக சொன்ன வார்த்தைகள் ஏற்படுத்தும் காயம் ஆறவே ஆறாது.
(ப்ராங்க்லின்)
மரணமும், வார்த்தைகளும், வரிகளும்,
தவீர்க்க முடியாதவை.
(ஹாலிபர்ட்டன்)
பொய்யான சொற்கள் தன்னுள்ளே கெடுதலை வைத்துக் கொண்டிருப்பதோடல்லாமல் அவைகள் ஆத்மாவையும் அதனோடு நோய்வாய்ப்படச் செய்கிறது.
(சாக்ரடீஸ்)
சொற்களுக்குப் பொருள் இருப்பது மட்டுமல்ல.
அந்தப் பொருளுக்கேற்ற வலிமையும் அதற்குள் இருக்கிறது.
(மகாத்மா காந்தி)
வார்த்தைகளில் மென்மையும்,
வாதத்தில் அழுத்தமும் தேவை.
பாடலிலும், பேச்சிலும் சொற்கள் இருக்கின்றன.
சொற்கள் எதைக் குறிக்கின்றனவோ அந்த வலிமை அந்தச் சொற்களுக்கு உண்டு. வலிமை என்ற சொல் திரும்பத்திரும்ப சொல்லப்படும் போது வலிமை தருகிறது. சோர்வு என்ற சொல் சோர்வு தருகின்றது. இதில் சோர்வடையச் செய்யும் சொற்கள் மனித சக்தியை வடித்துவிடுபவை.
மெழுகுவர்த்தி சிந்தனைகள் -தீப்பந்த வார்த்தைகள்.
மனிதனுடைய இதயக் குமறலே,
அவனுடைய வார்த்தைகளாக வெளிப்படுகின்றன.
சொன்ன ஒரு சொல்,
விடுபட்ட அம்பு,
கடந்து போன வாழ்க்கை,
நழுவ விட்டுவிட்ட சந்தர்ப்பம் -
ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது.
(அராபிய நாட்டுப் பழமொழி)
கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் காட்சிகளும்,
காதில் விழுந்து கொண்டே இருக்கும் சொற்களும்,
ஓசைகளும் நம்மையறியாமலேயே
நம்முடைய மூளையில் பதிந்து விடுகின்றன.
பதிந்து நமக்குத் தெரியாமலேயே
நம் விருப்பு வெறுப்புகளை நிர்ணயித்து விடுகின்றன.
( மனோதத்துவம்)
பிறருடைய வார்த்ததைகள் -
உங்களது உற்சாகத்தை,
உங்களுடைய முயற்சியை
ஒருநாளும் குறைத்து விட முடியாது.
நீங்கள் அனுமதித்தாலொழிய.
சொற்களை எண்ணிக்கை போடக்கூடாது.
எடைதான் போட வேண்டும்.
சொற்கள் -
தேனீக்களைப் போன்றது.
அவைகளில் தேனும் உண்டு.
கொடுக்கும் உண்டு.
மென்மையான ஒரு சொல் இதயவாசலைத் திறக்கிறது.
உணர்வதை நாம் செய்வோம்.
சொல்வதை நாம் உணர்வோம்.
(செனிகா)
காலம் போகும்.
வார்த்தை நிற்கும்.
அறிவுள்ள மனிதனுக்கு ஒரு சொல் போதும்.
அம்புகள் உடலை ஊடுருவித்தாக்கித் துளைக்கின்றன.
கொடுஞ்சொற்கள் ஆன்மாவை ஊடுருவித் தாக்கித் துளைக்கின்றன.
சுவாசிக்கும் எண்ணங்களே ?
எரியும் வார்த்தைகள்.
( கிரே )
குறைந்த வார்த்தைகள் -
மேலான பிராத்தனையாகும்.
(லூதர்)
திரும்பத் திரும்பச் சொல்லும் வார்த்தைகள் -
சுவையின்மையையும், சலிப்பும் ஏற்படுத்தும்.
( பாயிலே)
தீயைவிடக் கொடுமையானது ? தீய சொல்.
தைரியமான சொற்கள் -
மிகவும் தைரியம் நிறைந்த செயல்கள் -
மனிதனை வீரனாக்கும்.
வார்த்தை ஒன்று தடை செய்யப்பட்டால்
அந்த வார்த்தைக்கு வலிமை வருகிறது.
அந்த வார்த்தை வன்முறையை அடைகிறது.
அந்த வார்த்தையில் விஷமேறிப் போகிறது.
( லென்னி புரூஸ்)
வாழ்க்கையில் திரும்பப் பெற முடியாதவை ?
உயிரும், நேரமும், சொற்களும்.
சொல்வன்மைக்கு மனத் தெளிவு அவசியம்.
எந்த விஷயத்தின் நுட்பத்தையும்,
முழுத்திறமையையும் அலசி அறிந்து
பகுத்தறிவோடு பிறருக்கு உண்மையை
விளக்கும் ஆற்றல் வேண்டும்.
கடைக்குட்டி
பாரதம் சொல்லிக் கொண்டு இருந்தார். சகாதேவன் பற்றி சொல்ல வேண்டி வந்தது. "
சகாதேவன் கடைசிப் பிள்ளை. கடைக்குட்டி. அவன் சிறந்த ஞானி. பொதுவாகவே
கடைக்குட்டிகள் ஞானியாக இருப்பார்கள். கரணம் அப்பனுக்கு ஞானம் வந்த பிறகு
பிறக்கிறவன் கடைக்குட்டி பிள்ளை

ஞானியாகி விடுவான் . என்ன ஞானம் என்கிறீர்களா? இனி குழந்தை பெறவே கூடாது
என்ற ஞானம்."
இவ்வாறு விளக்கிய வாரியார்.. கூட்டத்தினரை பார்த்து "
இங்கே யாராவது கடைக்குட்டிப் பிள்ளைகள் இருக்கிறீர்களா ?" என்று கேட்டார்.
10 அல்லது 15 சிறுமியர்கள் எழுந்து நின்று தாங்கள் கடைக்குட்டிகள்
என்றார்கள்.
வாரியர் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துவிட்டு. "
உட்காருங்கப்பா! யார் எந்த விஷயத்தை முடிவு செய்றதுன்னு விவஸ்தையே
கிடையாதா? அம்மா அப்பா என்ன முடிவுல இருக்காங்களோ

வாங்காதீங்கப்பா" என்றார். எல்லோரும் வாய் விட்டு சிரித்தார்கள்.
குழந்தைகளும் தாங்கள் எத்தனையாவது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் வீடு
சென்றனர்.
புதன், 2 பிப்ரவரி, 2011
2011 இந்துக்களின் ராசி பலன் (மாதப்பலன்களுடன்
2011ற்குரிய அனைத்து ராசிகளதும் பலன்கள் பிரபல ஜோதிடரால் கணிக்கப்பட்ட இக் கையேடு எனக்கு கிடைக்கப்பட்டது எனது நண்பர் மூலம் நான் அதனை உங்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கோடு பதிவிடுகின்றேன். மாதத்திற்குரி தனிப்பலன்களும் இத்துடன்உண்டு. சிலருக்கு இந்தப் புத்தகங்கள் வாங்குவதற்கு வசதி இருக்காது சிலருக்கு நேரம் இருக்காது வேறும் சில நண்பர்களுக்கு அண்மையில் தமிழ் புத்தகக் கடைகளே இருக்காது... எனவே அவர்களுக்கு இது மிகவும் பிரயோசனமே..... தனி தனியாகவும் பார்க்கலாம் டவுண்லோடு செய்தும் பார்க்கலாம் பதிவிறக்கிப் பார்ப்பதற்கு இங்கு rasi palan.zipகிளிக் செய்யவும்.